"போக்குவரத்துத் தொழிலாளரைஅ.தி.மு.க. தூண்டிவிடவில்லை" பிடிவாதப் போக்கை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்: ஜெயகுமார்

0 636

போக்குவரத்துத் தொழிலாளர்களை போராட்டம் நடத்துமாறு அ.தி.மு.க. தூண்டிவிட்டதாக கூறுவது அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கூறினார்.

அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த அவர், போராடும் தொழிலாளர்களுக்கு எதிரான பிடிவாதப் போக்கை அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். பற்றிய நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் பேச்சுகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இல்லை என்றும் ஜெயகுமார் கூறினார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் எம்.ஜி.ஆர் பற்றி வரலாற்றை மறைத்து ரஜினிகாந்த் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments